20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில், சட்டவிரோத உறவில் ஏற்பட்ட தகராறில், 20 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் காதலனால் கொலை செய்யப்பட்டார். வெடி மருந்து குச்சி ஒன்றை அவரது வாயில் செலுத்தி கொடூரமாக கொலை செய்ததாக குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சலிகிராம தாலுகாவில் உள்ள பேரியா கிராமத்தில் ரக்ஷிதா என்ற 20 வயது பெண். கேரளாவை சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளியை திருமணம் செய்திருந்தாலும், சித்தராஜு என்பவருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் விடுதியில் தங்கியிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது ரக்ஷிதாவின் மரணத்தில் முடிந்தது. முதலில், கைபேசி வெடித்ததால்தான் ரக்ஷிதா இறந்ததாக குற்றவாளி சித்தராஜு மற்றவர்களை திசை திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சித்தராஜு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சலிகிராம காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்தக் கொலைக்கான காரணத்தை நாங்கள் மேலும் விசாரித்து வருகிறோம். ரக்ஷிதாவை கொல்வதற்காக, ரசாயன வெடிமருந்து கலவை ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அதன் தன்மையை உறுதிசெய்ய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழு அதை ஆய்வு செய்து வருகிறது" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Edited by Mahendran
