1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Love hiding marriage Romantic couples commit suicide

திருமணத்தை மறைத்து காதல்…. காதல் ஜோடிகள் தற்கொலை

love affair
கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி  தாலூக்கா விஜய நகரில் கோலார் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள உர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த குருபிரசாத் என்பவருடன் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்படுள்ளது.

குருபிரசாத் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அதை மறைத்து பவித்ராவை காதலித்து வந்துள்ளார்.

குருபிரசாத்தின் திருமண விவகாரம் தெரிய வந்தது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரித்தனர்.

இந்த நிலையில், பவித்ரா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குருபிரசாத்தும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விஜய்ப்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மருத்துவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்