1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (11:36 IST)

கேரளாவில் முழு ஊரடங்கு; பினராயி விஜயன் அதிரடி உத்தரவு

கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிபிஎல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எனினும் சிபிஎம் சார்பாக மீண்டும் நடப்பு முதல்வர் பினராயி விஜயனே தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு முதல்வரான பினராயி விஜயன் நாளை மறுநாள் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் பல மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.