வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (12:55 IST)

கத்துவா சிறுமி பலாத்காரம்: 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட் 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 
கைதான சிறுவனின் வயது தொடர்பான மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அவனை தவிர்த்து மீதம் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 
 
கத்துவா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.