வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (14:58 IST)

கர்நாடக சபாநாயகர் கோரிக்கை நிராகரிப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி விலகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கர்நாடக சபாநாயகர், உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார். எனவே உச்சநீதிமன்றம் கர்நாடக சபாநாயகருக்கு அறிவுரை கூற முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளதுடன் தனது வழக்கை இன்றே விசாரிக்கவேண்டும் என்ற கர்நாடக சபாநாயகரின் கோரிக்கையும் நிகாரித்தது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆட்சி நிலைப்பதில் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 
இந்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதலமைச்சர் குமாரசாமி தனது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாகவும், அரசைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
ஆனால் இதை மறுத்துள்ள அவர், நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். 2008 - 2009 ஆம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகள் யாருக்கும் ஞாபகம் இல்லையா? என்று கேள்வி எழுப்பிவிட்டு நகர்ந்தார். 
 
ஆம், கடந்த 2008 -2009 ஆம் ஆண்டு 18 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 
 
ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு சட்டசபையில் வாக்கெடுப்புக்கு வரவிருந்த தினத்தின் அதிகாலையிலேயே, அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பய்யா.
 
எனவே, பாஜகவை உதாரணமாக இதேபோல் குமாரசாமி தனது ஆட்சியை தக்க வைத்து பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கிறார் குமாரசாமி என மஜத் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து இன்றே முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது . இந்நிலையில் உச்ச நீதிமன்ற அறுவுரைக்கு எதிராக கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார் மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.மேலும்  சபாநயகருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.