1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (12:41 IST)

சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு..

சிதம்பரம் சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட நிலையில் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிகிச்சைக்காக 3 நாள் இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போது சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.