வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (19:51 IST)

ஓடிடியில் அதிகரிக்கும் ஆபாசம்....மத்திய மந்திரி அதிரடி

ஓடிடி தளங்களில் ஆபாச வார்த்தைகள் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்

இந்தியாவில், அமேசான், நெட்பிளிக்ஸ்,  ஜீ, ஆஹா போன்ற பல முன்னணி ஓடிடி தளங்கள் உள்ளது.

கொரொனா காலத்திற்குப் பின்,  திரையங்குகளில் படங்கள் ரிலீஸாகும் படங்கள் ஓடிடி ப தங்களில்  நேரடியாகவும், சில நேரங்களில், தியேட்டர்களில் ரிலீஸாகி குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஓடிடி தளங்களிலும் ரிலீஸாகி வருகிறது.

இந்த நிலையில், திரையங்குகளில் ரிலீசாகும் படங்களுகு சென்சார் செய்யப்படுவதுபோல், ஓடிடியில் வெளியாகும் படங்களிலும், வெல் சீரிஸிலும் ஆபாச உள்ளடக்கம், ஆபாச வார்த்தைகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று நாக்பூரில் செய்தியாளார்களிடம் கூறியதாவது:

‘’ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்குப் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் அளிக்ககப்பட்டதே தவிர துஷ்பிரயோகம் செய்ய அல்ல. இதன் மேல் எழுந்துள்ள 90 சதவீரம் புகார்கள் மாற்றம் செய்ய, நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் , இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் ‘கூறியுள்ளார்.