தொடர்புடைய செய்திகள்
- நாளை 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- சென்னையில் விடிய விடிய கனமழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்..!
- வேளாங்கன்னியில் இருந்து திருப்பதி, எர்ணாகுளத்திற்கு 2 புதிய ரயில்கள்: முழு விபரங்கள்..!
- தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்..!
- வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் செயலி.. மத்திய அரசு அறிமுகம்..!
திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் கனமழை.. நான்கு மாட வீதிகளை சூழ்ந்த வெள்ளம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென பெய்த கன மழை காரணமாக நான்கு மாட வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் கடும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் போலவே ஆந்திராவிலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று திடீரென திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கன மழை பெய்தது.
விடிய விடிய பெய்த இந்த மழை காரணமாக ஏழுமலையான் கோவிலில் நான்கு மாடவீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மழை வெள்ளத்தில் மூழ்கிய கோவில் சுற்றுவட்டார பகுதிகளை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் பக்தர்கள் கடும் அவதியில் இருப்பதாகவும் இதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
