ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (12:57 IST)

நாளை முதல் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
நாளை முதல் ஜூன் 10ஆம் தேதி வரை கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருக்கும் நிலையில் அது புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று தெரிவித்திருந்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கேரளாவில் நாளை முதல் பத்தாம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் முடிவடையும் நிலையில் இனி தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran