தொடர்புடைய செய்திகள்
- ஒமிக்ரானால் இறந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்! – அமெரிக்காவில் சோகம்!
- ஊழியர்களுக்கு ஒமிக்ரான்; விமானங்கள் ரத்து! – காற்று வாங்கும் விமான நிலையங்கள்!
- 422 ஆக அதிகரித்த ஒமிக்ரான் பாதிப்பு; மகாராஷ்டிரா முதலிடம்! – இந்திய நிலவரம்!
- ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!
- இந்தியாவில் தடுப்பூசியால் ஒமிக்ரான் குறையும்! – தென் ஆப்பிரிக்கா நிபுணர் தகவல்!
டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு
இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 27ம் தேதியான இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்றும் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது
டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எடுத்து அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
