எதுவுமே பெருசில்ல மகனே!.. செலவு பண்ணு!.. தொழிலதிபருக்கு அப்பா கொடுத்த அட்வைஸ் செம வைரல்!...
என்னதான் பணம் சம்பாதித்தாலும் ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கும்போது பலருக்கும் தயக்கம் ஏற்படும்.. இவ்வளவு விலை கொடுத்து இந்த பொருளை வாங்கலாமா?. அப்படி வாங்கினால் அந்த செலவை நம்மால் சமாளிக்க முடியுமா?.. நாம் அதிகமாக செலவு செய்கிறோமா?.. அந்த பணத்தை வேறு ஏதாவதில் முதலீடு செய்யலாமா அல்லது பயன்படுத்தலாமா? என்கிற குழப்பம் வரும்.பணம் கணக்கில்லாத அளவுக்கு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஆனால் ஓரளவு பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்த குழப்பம் வரும்.
இந்நிலையில்தான் மும்பையை சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபருக்கு அவரின் அப்பா கொடுத்த அறிவுரை தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷியுடா புர்க்கர் என்பவருகு ஒரு ஆடம்பரமான BMW காரை வாங்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. ஆனால் இவ்வளவு விலை கொடுத்து இந்த காரை வாங்கலாமா? இல்லை நாம் அதிக செலவு செய்கிறோமா? என்கிற குழப்பம் ஏற்பட அவரின் தந்தைக்கு போன் செய்தார்.
மறுமுனையில் அவரிடம் பேசி அவரின் தந்தை எதுவுமே பெரிய விஷயம் இல்லை மகனே.. நீ ஆசைப்பட்டதை வாங்கவும் செலவு செய்யவும் யோசித்தால் நாளை இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் உன்னிடம் குறைந்து போய்விடும் என்று கூறினார்.
இந்த ஒரு வரி அறிவுரை வாழ்க்கையின் மீதான தனது பார்வையை மாற்றி விட்டதாக அந்த இளம் தொழிலதிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது தந்தையிடம் பேசிய வீடியோவைம் பகிர்ந்துள்ளார். அவர் இந்த பதிவுக்கு இளைஞர்கள் பலரும் லைக் செய்து வருகிறார்கள். மகனுக்கு அறிவுரை கொடுத்த அந்த தந்தை சினிமா பிரபலம் சஷாங்க் உடாபுர்கர். ஹிந்தியில் நடிகர், இயக்குனர், கதாசிரியர் என வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.