தொடர்புடைய செய்திகள்
- ”கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் பணம்”.. கர்நாடக எம்.எல்.ஏ க்கு பேசப்பட்ட பேரம்
- ”குமாரசாமி வெட்கமே இல்லாமல் ஆட்சியை நீட்டிக்க முயல்கிறார்”…எடியூரப்பா ஆவேசம்
- அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..
- சந்திராயன் 2 பறப்பதற்கு ரெடி…இஸ்ரோ தகவல்
- கர்நாடக விவகாரம்: ‘முடிவெடுக்க சபாநாயகருக்கு காலவரையறை விதிக்க முடியாது’ - உச்ச நீதிமன்றம்
மீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேற்று மதியம் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலையும் 4.24 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை என்பதால் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இது அம்மாநிலத்தில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
