வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (12:48 IST)

அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணிற்கு மிரட்டல்..

மேற்கு வங்கத்தில் அனுமான் பஜனையில் பங்கேற்ற முஸ்லீம் பெண்ணை. அப்பெண்ணின் உறவினர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஜகான். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு, இவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இந்நிலையில் சமீபத்தில்  பாஜக இளைஞர் அணி நடத்திய அனுமான் பஜனையில், இஷ்ரத் ஜகான், ஹிஜாப் அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த செயலுக்காக அவரது உறவினர்கள், அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து இஷ்ரத் ஜகான்,

”கடந்த புதன்கிழமை எனது உறவினர்கள், வீட்டின் உரிமையளர் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர், என்னை சூழ்ந்து மிரட்டினர். மேலும் நான் வசித்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர். இது தொடர்பாக கொல்கத்தாவின் கோலாபாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென கோரியுள்ளேன்” என கூறியுள்ளார்.