வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (17:03 IST)

நாளை இரவு செய்யக்கூடாத ஒன்று – என்னவென்று தெரியுமா?

நாளை இரவு மோடி சொன்னபடி விளக்கு ஏற்றும் முன்னர் சானிட்டைசர்கள் கொண்டு கைகழுவ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் நாளை இரவு மக்கள் விளக்குகளை ஏற்றும் முன்னர் சானிட்டைசர்களால் கைகளை கழுவ வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். ஏனென்றால் சானிட்டசைர்களில் 60 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் தீப்பற்றும் வாய்ப்பு அதிகம். எனவேப் சோப்களைப் பயன்படுத்தி கைகளைக் கழுவினால் போதுமானது.