1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (16:34 IST)

12 ஆண்டுகளுக்கு முன்னர் மாங்காய் திருடிய வழக்கில் தீர்ப்பு!

12 ஆண்டுகளுக்கு தோப்பில் மாங்காய் திருடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெள பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபரித் பிண்டாரி, ஹாசிப் அப்துல் ராய்ஸ் ஆகிய இருவர் மீது ராஷித் அலி பெக் என்பவர் புகாரளித்தார். அவரது புகாரே சற்று வித்தியாசமானது. தனது தோப்பில் புகுந்து இருவரும் மாங்காய் திருட முயன்றதாகவும் அதை தடுக்க முற்பட்ட போது தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனால் இருவரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு 12 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபரித் பிண்டாரி நிரபராதி என்று தீர்ப்பளித்தார். (அப்துல் ராய்ஸ் உயிரிழந்துவிட்டார்). வழக்கில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை என்று நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்துள்ளனர்.