தொடர்புடைய செய்திகள்
- கேரளாவை அலறவிடும் கொரோனா! ஒரே நாளில் 292 பேர் தோற்றால் பாதிப்பு...!
- அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அண்டை மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்..!
- ஒரே நாளில் 298 பேருக்கு கொரோனா.. 2 பேர் பலி! – கேரளாவை உலுக்கும் கொரோனா!
- தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதா கொரோனா தொற்று? இதுவரை 48 பேருக்கு உறுதி.!
- தமிழகத்தில் கொரோனா தொடர்பான பதற்றமான சூழல் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தமிழகம், கேரளாவை அடுத்து கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்..!
தமிழக மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கேரளாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்திலும் சளி காய்ச்சல் உள்ளவர்கள் மாஸ்க் அணியஅறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் தமிழகம் கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்ந்து வருவதாகவும், கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணிப்போருக்கு 'மாஸ்க்' கட்டாயம் என்றும், கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
அதேபோல் கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாஸ்க் கட்டாயம் என்றும், மக்கள் விரும்பினால் மாஸ்க் அணியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
