தொடர்புடைய செய்திகள்
- வடக்கில் நின்றால் தோல்வி உறுதி.. ராகுலை அடுத்து தென் மாநிலத்தில் போட்டியிடும் சோனியா?
- அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக வாய் திறக்காதது ஏன்?
- பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா ரனாவத்
- அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர்! - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!
- நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? டிடிவி.தினகரன் தகவல்
5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக கூட்டணியை விரும்பும் அதிமுகவினர்: துக்ளக் ரமேஷ் கருத்து
ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக கூட்டணியை அதிமுக விரும்புவதாக துக்ளக் ரமேஷ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தலுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி வந்த அதிமுக தனியாக ஒரு கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது
அதுமட்டுமின்றி சிறுபான்மையினர் வாக்குகளையும் கவர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதிமுக எதிர்பார்த்தபடி சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் போல் தெரியவில்லை.
அதேபோல் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க யோசித்து வருகின்றன. இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 2024 தேர்தலிலும் அக்கட்சி ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த அதிமுகவின் சில தலைவர்கள் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை கொடுத்து வருவதாக துக்ளக் ரமேஷ் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போல் நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
