1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:15 IST)

தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதா கொரோனா தொற்று? இதுவரை 48 பேருக்கு உறுதி.!

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில்  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 16 பேருக்கும் சென்னையில் மட்டும் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே பொதுமக்கள் மாஸ்க் அணிதல் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது

Edited by Siva