தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்து இதுதான்? – திருத்தணிகாசலம் வாக்குமூலம்!
- சீனாவில் இருந்து வந்து சொதப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் – தமிழகம் கொடுத்த பணம் என்ன ஆனது?
- இந்தியாவுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவி செய்யும் அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு!
- கொரோனா வைரஸ்: உள்ளூர் முதல் உலகம் வரை - 15 முக்கிய தகவல்கள்
- விராட் கோலி, ரோஹித் சர்மா இதை ’’மிஸ் ’’ செய்வார்கள் - பிசிசிஐ பொருளாளர் கருத்து !
86 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! – சீனாவை மிஞ்சிய இந்தியா
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 30,153 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1068 பேர் பலியான நிலையில் 6,564 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 10,108 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 9,931 பேரும், டெல்லியில் 8,895 பேரும், ராஜஸ்தானில் 4,727 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,595 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
