1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 மே 2020 (08:43 IST)

35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு – எப்போது முடியும் கொரோனா காலம்?

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,752 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,152 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,889 லிருந்து 9,065 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 4,395 பேரும், டெல்லியில் 3,515 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,660 பேரும், தமிழகத்தில் 2,363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.