வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2020 (10:13 IST)

பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !!

பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !!

மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஸ்டிர மாநிலம் ஆகிய மாநிலங்களில் இருந்து சென்ற பாதுகாப்பு படைவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

குவாலியரில் உள்ள  தேகான்பூர் என்ற இடத்தில் எல்லைப் பாதுக்காப்பு முகாம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த 57 வயதான அதிகாரி ஒருவர் இங்கிலாந்தில் இருந்து சிலநாட்களுக்கு வீடு திரும்பினார். இதையடுத்து, இவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் இருவரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.