1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chidambaram arrested by enforcement

சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை..

சிதம்பரம்
திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று காலை விசாரணை நடத்திய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.

கிட்டதட்ட 2 மணி நேர விசாரணைக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
”ஜெயலலிதாவும் 40 திருடர்களும்”.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்