புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (11:30 IST)

கொள்ளையனுக்கு திருமணம்: ஒரே இடத்தில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட திருடர்கள்

கொள்ளையனுக்கு திருமணம்: ஒரே இடத்தில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட திருடர்கள்
கொள்ளையன் ஒருவனுக்கு நடைபெற்ற திருமணத்திற்கு 1000க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன் தபீக் ஷா. வழிப்பறி உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவன். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் தற்போது ஜாமினில் வெளியே வந்தான்.

இந்நிலையில் இவனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு டெல்லி, போபால், மும்பை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் வந்து கலந்து கொண்டு மணமகனை வாழ்த்தினர்.

ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட திருடர்கள் ஒரு இடத்தில் குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.