1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 மே 2020 (11:58 IST)

மாலை வெளியாகும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை!

சிபிஎஸ்இ, 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட உள்ளது. 
 
தமிழகம்  முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது ஜூலை மாதம் நடத்தப்படும் என கூறப்பட்ட சிபிஎஸ்இ, 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட உள்ளது. ஆம், சிபிஎஸ்இ, 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக  மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.