1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 மே 2020 (11:39 IST)

மிரட்டும் கொரோனா: 1000-த்தை கடந்த ராயபுரம்: விரைவில் கோடம்பாக்கமும்...!!

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது. 
 
நேற்றைய தகவலின் படி தமிழகத்தில் 434 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,018 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 434 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 309 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5946 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னை மண்டலங்களை பிரித்து பார்க்கையில் ராயபுரத்தில் 1047, கோடம்பாக்கத்தில் 919, திருவிக நகரில் 737, தேனாம்பேட்டையில் 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.