1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:54 IST)

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்  நடத்தப்போவதாக தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா  உட்கட்சி எதிர்ப்பு அணி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாநில தலை நகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது.

இந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.