1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bihar doctor get five dose vaccine

5 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட டாக்டர் மீது விசாரணை!

தடுப்பூசி
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்படுத்த 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பீகாரை சேர்ந்த டாக்டர் ஒருவர் 5 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலம் பாட்னா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் விபின் குமார் சிங் என்பவர் இதுவரை 5 டோஸ் தடுப்பூசி செய்துகொண்டதாக பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விதிகளை மீறி ஐந்து முறை தடுப்பு ஊசி செலுத்திய டாக்டர் மீது விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
2 டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நபர் எப்படி ஐந்து டோஸ் செலுத்தினார்? ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை தவறாக பயன்படுத்தினார் என்பது குறித்து விசாரணை செய்ய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்குமா? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!