1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:06 IST)

மீண்டும் முடங்கும் வங்கிகள் சேவை! அதிருப்தியில் பொதுமக்கள்!

வங்கிகள் நாளை முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை இயங்காது என்பதால் பணப்பரிவர்த்தனை பிரச்சனை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் தான் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக 4 நாட்கள் இயங்காமல் இருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பண பரிவர்த்தனை எல்லாம் இப்போது சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வாரத்துக்கு வங்கிகள் சேவை பொது மக்களுக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.

நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறையை அடுத்து, திங்கட்கிழமை ஹோலி விடுமுறையை செவ்வாய் கிழமை வேலை நாளாக உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை  இருக்காது. அதற்கடுத்த நாள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்றும் சேவை இருக்காது. ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறையை அடுத்து ஏப்ரல் 3 சனிக்கிழமை வங்கி சேவை இருக்கும். ஆனால் அதற்கடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் விடுமுறையாகும். இப்படி அடுத்த வாரம் முழுவதும் வங்கி சேவை தொடர்ச்சியாக கிடைக்காத சிக்கல் மக்களுக்கு எழுந்துள்ளது.