1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Baba Ramdev filed new affidavit

பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்

பதஞ்சலி
தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த  நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி   வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட் பதிலளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
இந்த நிலையில்,  தனது மன்னிப்பை  ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து,  உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த  நிலையில், புதிய பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
 
நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தனது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
About Writer
SInoj
அடுத்த கட்டுரையில்
நான் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவரை வெளியேற்றுவேன்: நாம் தமிழர் கட்சியின் சீமான்