உதயநிதி கைது விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி..
உதயநிதி கைதுக்குத் தடை கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைது தொடர்பான ஆவணங்கள் இன்னும் வரவில்லை எனக் கூறி நீதிபதி இளந்திரையன் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் வழக்கில் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டத்தின் முன் தப்பியோட நினைக்கும் குடும்ப அரசியலின் தந்திரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.
தங்கள் மீது நடவடிக்கை பாயும்போதெல்லாம் நீதிமன்றத்தை நாடித் தற்காலிகத் தப்பிக்க தேடும் திமுகவின் நாடகங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. தவறு செய்தவர்கள் சட்டத்தின் தண்டனையிலிருந்து எக்காலத்திலும் தப்பிக்க முடியாது என்பதை இந்த நீதிமன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
தமிழ்நாட்டில் நேர்மையான மற்றும் சுத்தமான அரசியல் மாற்றத்தை உருவாக்கத் தவெக தலைவர் விஜய் வழியில் மக்கள் உறுதியாகிவிட்டனர். இந்தச் சட்ட விரோதப் போக்கிற்கு மக்கள் மன்றத்தில் மிக விரைவில் உரிய தீர்ப்பு வழங்கப்படும்.
Edited by Siva
