தொடர்புடைய செய்திகள்
- சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும்போது கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்!
- சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்க சிறப்பான திருத்தலங்கள்!
- 18 திருப்படிகளில் 18 திருநாமங்களுடன் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பன்!
- சபரிமலை சீசனை முன்னிட்டு தற்காலிக கடைகள்: திமுக எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் ரத்து..!
- கோடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் விசாரணைக்கு ஆஜர்!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக அய்யன் செயலி: கேரள அரசின் சூப்பர் வசதி..!
சபரிமலைக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை போட தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அய்யன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்கவும் வனவிலங்கு நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். அது மட்டும் இன்றி தங்குமிடம், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு இந்த செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
