தொடர்புடைய செய்திகள்
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- சிறந்த படம் அயோத்தி… சிறந்த நடிகர் வடிவேலு- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட விருதுகள்!
- இன்று முதல் தொடங்கியது தூத்துக்குடி-சென்னை ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி
- ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு! ரயில்கள் நின்று செல்லும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த அறக்கட்டளை குழு..!
அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன?
அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புனரமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 22ஆம் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் ராமர் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அயோத்தி ரயில் நிலையம் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் இதுவரை அயோத்தி ரயில் சந்திப்பு என்ற பெயர் இருந்த நிலையில் இனிமேல் அது அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அயோத்தி தாம் என்றால் ராமர் சீதையின் இருப்பிடம் என்பது பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
