1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (15:15 IST)

தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது தாக்குதல்

தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது தாக்குதல்
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கல்லால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திராலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதலில் தங்கம் வென்றவர் பூனம் யாதவ். இவர் வாரணாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது உறவினருக்கும் பக்கத்து ஊர் தலைவருக்கும் உள்ள சொத்து பிரச்சனை விஷயமாக அவரிடம் பேச சென்றுள்ளார்.அப்போது ஏற்பட்ட பிரச்சனையில், பூனம் கற்களால் தாக்கப்பட்டார்.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது தாக்குதல்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பூனம் யாதவை மீட்டு, அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.