1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (14:58 IST)

சிறையில் இருந்தே நிர்வாகம். கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்.. ஆம் ஆத்மி திட்டவட்டம்

arvind kejriwal
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது தொடர்வாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது கட்சி இது குறித்து திட்டவட்டமான முடிவை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
 
 மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் சிறையில் இருந்தே அவர் பிறப்பிக்கும் உத்தரவை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
 
மேலும் அனைத்து நிர்வாகிகளும் டெல்லி முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே முதலமைச்சர் பதவியை எத்தனை நாளைக்கு நிர்வாகம் செய்ய முடியும் என்பதை குறித்து சட்ட ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran