வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:50 IST)

பாஜகவில் சேர்ந்தால் ரூ.20 கோடி: பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் புகார்!

aam aadmi party
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் ரூபாய் 20 கோடி தருவதாக பாஜக மேலிடம் கூறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் திடீரென சிபிஐ சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தற்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மேலிடம் தங்களை ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் 
 
இந்த குற்றச்சாட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்தது போலவே டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது