செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 மார்ச் 2023 (22:33 IST)

பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விபத்து....விமானிகளை தேடும் பணி தீவிரம்

MADHYA PRADESH
மத்திய பிரதேச மாநிலத்தில், பயிற்சி விமானம்  ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் திராங் பகுதியிலுள்ள போம்டிலா அருகே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, விமானக் கட்டுப்பாட்டு அறையுடமான தொடர்பை ழந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் வீரமரணமடைந்தவர்கள் வுவிவி பிரட்டி மற்றும் ஜெயந்த் என்றும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு விபத்து நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில், இரண்டு பயிற்சி விமானிகளுடன் சென்று  கொண்டிருந்த விமானம் திடீரென்று விபத்திற்குள்ளளானது.

இதையடுத்து, பாலாகாட் மாவட்டத்திலிருந்து 40.கீமீ தொலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில், லாஞ்சி கிர்னாபூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

மேலும், காணாமல் போன பெண் பயிற்சி விமானியை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.