தொடர்புடைய செய்திகள்
- CAA - NRC போராட்டம்: கைது செய்யப்பட்ட பெற்றோரின் வருகைக்காக காத்திருக்கும் 14 மாதக் குழந்தை
- உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்: அதிரடியில் இறங்கிய கர்நாடகா!
- மெட்ரோ ரயில்களுக்கு இனி ஆன்லைன் டிக்கெட்! – செல்போன் செயலி அறிமுகம்!
- இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மலேசியாவில் போராட்டம்
- முடிந்தது வலிமை முதல் கட்ட படப்பிடிப்பு – சென்னை திரும்பியது படக்குழு !
சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது!
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்களை மாணவிகள் தங்கள் வீட்டின் முன் போட்டனர். இதனை அடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட 6 மாணவிகளை போலீசார் கைது செய்தனர்
மாணவிகள் போட்ட கோலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து Against CAA, Against NPR போன்ற வாசகங்களை எழுதியதாகவும் இதனையடுத்து அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
6 மாணவிகள் கைது செய்யப்பட்ட போது அங்குள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட 6 மாணவிகள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
அடுத்த கட்டுரையில்
