1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 5 districts red alert in Kerala

கேரளவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

கேரளா
கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இதே போல கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 
 
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர, மற்ற ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று கேரளா வந்துள்ளனர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அப்பா குடிக்கிறார்.. நான் நல்லா படிக்கணும்.. உதவுங்க..! – முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுவன்!