1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (17:29 IST)

திருமணத்தில் கலந்துகொண்ட 13 பெண்கள் உயிரிழப்பு...

உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர்  மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷி நகர் மாவட்டத்தில்  இன்று ஒரு திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த பெண்கள் அங்குள்ள ஒரு கிணற்றின் இரும்பு வலையத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இரும்பு வலை உடைந்தது. அதில் அமர்ந்த சுமார் 13 பேர் பரிதாபமாக உயிருழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.