ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:25 IST)

பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. 61 ஆயிரத்தை தாண்டியது சென்செக்ஸ்!

Share
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்றும் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 230 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது புதிய உச்சமாகக் கருதப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 15160 என விற்பனையாகி வருகிறது. சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva