1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (09:32 IST)

பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலவரம் என்ன?

Share
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.கடந்த வாரம் பங்குச்சந்தை நல்ல முன்னேற்றம் அடைந்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சிறிதளவு உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது 62 ஆயிரத்து 340 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 18524 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றையதினம் ஆரம்பத்தில் பங்குச்சந்தை சற்று உயர்ந்து இருந்தாலும் மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva