1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

இன்றும் பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 62,000ஐ நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Share
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தில் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டு வரும் நிலையில் இன்றும் சுமார் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பைபங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருப்பதால் சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 200 புள்ளிகளுக்கு மேல் அதாவது யார் 240 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 61 ஆயிரத்து 745 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 62 ஆயிரத்தை நெருங்குவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65  புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 333 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருங்காலத்தில் பங்கு சந்தை மிகப் பெரிய ஏற்றம் அடையும் என்றும் இன்னும் ஓரிரு வருடங்களில் சென்செக்ஸ் ஒரு லட்சம் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 408 பேருக்கு பாதிப்பு; 05 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!