1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (14:40 IST)

சென்செக்ஸ் 1,180 புள்ளிகள் உயர்ந்து நிறைவு!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவை கண்டு வரும் நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 

 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்ந்து 53,780 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 16,098-க்கு வர்த்தகமாகிறது.
 
இதனைத்தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,180 புள்ளிகள் உயர்ந்து 54,605 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 326 புள்ளிகள் அதிகரித்து 16,340 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.