1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (10:47 IST)

மீண்டும் சரிந்தது சென்செக்ஸ்: இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகள் சரிவு!

பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளதாகவும் அதேபோல் நிப்டி 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்றும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இன்று சென்செக்ஸ் 1750 புள்ளிகள் சரிந்து 17650 என்ற நிலையில் வர்த்தமாகி வருகிறது. அதே போல் நிப்டி சுமார் 500 புள்ளிகள் சரிந்து 15760 என்ற நிலை வர்த்தமாகி வருகிறது
 
பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக அதில் முதலீடு செய்தவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்கள் பங்குச்சந்தை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது