1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (16:42 IST)

அமேதியில் விட்டதை வயநாட்டில் பிடித்த ராகுல் - அபார வெற்றி

17 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக  கிட்டதட்ட 347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் மிகக் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளன.

இதனால் பாஜக தணிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.  மோடி போட்டியிட்ட வாரனாசி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
வயநாடு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ராகுல் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அபாரவெற்றி பெற்றுள்ளார் ராகுல் காந்தி. அமேதியில் பின்னடைவை சந்தித்தாலும் வயநாட்டில் வெற்றி அடைந்து காங்கிரஸ் கட்சியினர் மனதில் நிம்மதியை கொண்டு வந்திருக்கிறார்.