1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (17:57 IST)

நாட்டின் கண்ணியத்தை சீர்குலைத்தவர் மோடி..! சோனியா காந்தி விமர்சனம்..!!

நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரக் கூட்ட மேடையில் பேசிய அவர்,  கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது என குற்றம் சாட்டினார்.
 
அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது என்றும் நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார் என்றும் சோனியா காந்தி விமர்சித்தார்.

 
எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.