1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
  4. Election officials in 40 constituencies..! EPS Notification

40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள்..! இபிஎஸ் அறிவிப்பு

edapadi
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார்.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி, கோவை, நீலகிரிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்சென்னைக்கு கோகுல இந்திரா, மத்திய சென்னை தொகுதிக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம், புதுச்சேரி தொகுதிகளுக்கு சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 
தேனி, ராமநாதபுரத்துக்கு ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மற்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஆளுநர் பதவியில் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. உடனே பதவி விலக வேண்டும்..! திருமாவளவன்..!!