1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
  4. Problem in tiruvarur and sriperumputhur centre

வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கை வசதி இல்லை – முகவர்கள் கூச்சல் !

LokSabha Election Results 2019 Live
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்பு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.

திருவாரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளில் முகவர்களுக்கு சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் விசிறி வசதி இல்லை என்று முகவர்கள் கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த மையங்களில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

அதனால் அந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பாஜகவுக்கு சாதகமாக முதல் முடிவுகள்: உற்சாகத்தில் தொண்டர்கள்