வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (13:11 IST)

ஜெயக்குமார் மீதான் புகாரில் விசாரணை – தேர்தல் அதிகாரி பதில் !

அமைச்சர் ஜெயக்குமார் மீதான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக் கேட்ட பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்த அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது அதிமுகவுக்கு வாக்களித்தால் மாதம் 1500 ரூபாய் கிடைக்கும் எனக் கூறினார்.

ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு தேர்தல் விதிகளை மீறுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக திமுக சார்பில் ‘திமுகவுக்கு வாக்களித்தால் மாதம் 1,500 ரூபாய் தருவோம் என்று ஓர் அமைச்சரே பேசியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்லாமல் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ‘அந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது’ எனக் கூறினார். மேலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு தரப்புகளில் இருந்தும் புகார்கள் வருவதாகவும் கூறினார்.