1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. aravindhswamy said ai is the future

இனிமே எல்லாம் AI- தான்!.. ஐடி துறை காலி!.. அதிர்ச்சி கொடுக்கும் அரவிந்த்சாமி!...

aravindhswamy
கம்ப்யூட்டர் வந்தபோது எப்படி அது தொழில்நுட்பத்தின் புரட்சியாக பார்க்கப்பட்டதோ அப்படி தற்போதைய AI தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்படுகிறது. மனிதன் செய்யும் பல விஷயங்களையும் சுலபமாக அதுவும் குறைவான நேரத்திலேயே AI செய்து விடுகிறது. உதாரணத்திற்கு 10 மனிதர்கள் சேர்ந்து ஐந்து மணி நேரத்தில் செய்யும் ஒரு வேலையை ஒரு AI 5 நிமிடங்களில் செய்து கொடுக்கிறது..

எனவே ஐடி துறையில் இனிமேல் எதிர்காலத்தில் எல்லாம் AI-தான். எனவே ஐடி துறையில் இருப்பவர்கள் AI கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் எதிர்காலத்தில் வேலையை இழப்பார்கள் என பல ஐடி துறை வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே இப்போது பல இளைஞர்களும் AI குறித்த படிப்பை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில்தான், நடிகராக இருந்தாலும் சாப்ட்வேர் துறையில் தொழில் செய்து வரும் நடிகர் அரவிந்த்சாமி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஆந்த்ரோபிக் நிறுவனம் தானாகவே கோடிங் செய்யும் AI டூலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல மணி நேரம் எடுத்துக் கொள்ளும் கோடிங்கை எளிதாக செய்து முடிக்க முடியும்.

இது ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன். மென்பொருள் சேவைகள் முன்பு போல இல்லை. கோடிங்கை AI பொதுவானதாக மாற்றிவிட்டது. ஊழியர் எண்ணிக்கை மற்றும் ஆர்பிட்டேஜ் மாடல் விரைவில் உடைக்கப்படும்’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அவதூறுகளுக்கு இடம் தரும் வகையில் பேசக்கூடாது.. கட்சியினருக்கு திருமாவளவன் கோரிக்கை..!